×

பைக் விபத்தில் பெயிண்டர் சாவு

சங்கரன்கோவில், பிப்.7: சிவகிரி அருகே தென்மலையை சேர்ந்த வெயிலுமுத்துமகன் மாரிச்செல்வம்(23), பெயிண்டர்.  இவர் நண்பரை பைக்கில் ராஜபாளையத்தில் விட்டு விட்டுவந்து கொண்டிருந்தார். பெருமாள்பட்டி அருகே பைக் நிலைதடுமாறியதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Painter ,bike accident ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை