×

நாகலாபுரத்தில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம்,பிப்.7: விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் தமிழக அரசின் கல்வி விரோத போக்கை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகலாபுரம் பஜார் பகுதியில் உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நாகலாபுரம் கிளை செயலாளர் தலைமை வகித்தார். விளாத்திகுளம் தாலுகா செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜாய்சன், மாவட்ட துணைச்செயலாளர் வீரசுதாகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிஏஏ, என்பிஆர், என்ஆா–்சி ஆகியவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், நாகலாபுரம் பகுதியில் அரசு பள்ளியை உருவாக்க வேண்டும், நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி மற்றும் சுற்றுச்சுவர் வசதி உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி புதூர் ஒன்றிய செயலாளர் சிவசெல்வம்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதூர் ஒன்றிய பொருளாளர் ஆசைதம்பி, திமுக நிர்வாகி காளிமுத்து, சிபிஐ விளாத்திகுளம் தாலுகா செயலாளர் புவிராஜ், நாகலாபுரம் கிளைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ,நாகலாபுரம் கல்விவளர்ச்சி குழுவை சேர்ந்த சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் நன்றி உரையாற்றினார்.


Tags : Students union ,Nagalapuram ,
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு