×

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 69 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி, பிப்.7: தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 69 ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் வாரந்தோறும் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து அடுத்த வார நாட்களில் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதில் பல பகுதிகளில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகின்றனர். எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர். நேற்று  தூத்துக்குடி நந்தகோபாலபுரம் மெயின் ரோடு, அழகேசபுரம், கந்தசாமிபுரம் பிரதான சாலை மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் தலைமையில் காலையில் இருந்து மாலை வரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 69 ஆக்கிரமிப்புகள் அடுத்தடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்டு இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags : Thoothukudi Corporation ,
× RELATED தூத்துக்குடியில் சாலையில் சுற்றி திரிந்த 27 மாடுகள் பிடிபட்டன