×

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

ஓட்டப்பிடாரம், பிப்.7:மணியாச்சி அடுத்துள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் பால்மணி. இவரது மனைவி மைதிலி(38), இவர் நேற்று முன்தினம் கங்கைகொண்டான் சென்றுவிட்டு ஸ்கூட் டரில் ஊருக்கு திரும்பிவந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென மைதிலி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.  இதுபற்றிய புகாரின்பேரில் நாரைக்கிணறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தார். விசாரணையில் கடம்பூர் அருகே கோபாலபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் பாலசுப்பிரமணியன் (52) என்பவர் நகையை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்து அவரிடமிருந்த 5 பவுன் நகையை மீட்டனர்.


Tags : jewelery ,
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...