×

திருச்சியில் இருந்து பொன்னமராவதி வழியாக மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும்

பொன்னமராவதி.பிப்.7: திருச்சியில் இருந்து பொன்னமராவதி வழியாக மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் என்று தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொன்னமராவதியில் தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகின்ற மார்ச் மாதம் பொன்னமராவதியில் தேமுதிகவின் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவழைத்து அவர் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வடக்கு ஒன்றியத்தில் சேரனூர் ஊராட்சி கைவேலிப்பட்டி ஊராட்சிக்கு செல்லும் தார்சாலை அமைக்க வலியுறுத்தியும், பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் ஆலவயல் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வலியுறுத்தியும், வடக்கு ஒன்றியத்தில் காரையூர் ஊராட்சியில் மாநில அளவிலான பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும், மைலாப்பூர் ஊராட்சி பிள்ளையார்பட்டிக்கு பொது சமுதாயக்கூடம் அமைப்பது குறித்தும், திருச்சியிலிருந்து பொன்னமராவதி வழியாக மதுரை செல்ல ரயில் சேவை அமைக்க வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Madurai ,Trichy ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...