பொன்னமராவதி,பிப்.7: பொன்னமராவதி பகுதியில் உள்ள அரசு பள்ளியின் 8மற்றும் 9ம்வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளில் இருந்து அவர்களை தற்காத்துக்கொள்ளும் விதமாகவும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே வகுப்புகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. கருப்புக்குடிப்பட்டி, திருக்களம்பூர், வார்பட்டு, நல்லூர் ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆலவயல், நகரப்பட்டி, சடையம்பட்டி, மேலைச்சிவபுரி, காரையூர்,மேலத்தானியம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 8மற்றும் 9ம்வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு கராத்தே வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்த கராத்தே வகுப்புகள் மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்கின்றது. அச்சபாடல் இருக்க, எதனை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கு இது உதவுகின்றது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.