×

இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் 3வது தவணை பணம் கிடைக்காத விவசாயிகள் பயன்பெறும் வழிமுறை வேளாண் அதிகாரி விளக்கம்

பொன்னமராவதி, பிப். 7: பொன்னமராவதி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் நிதி கிடைக்கவிட்டால் அதை பெறும் வழிவகை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பொன்னமராவதி வட்டார விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் மூன்றாவது தவணையாக பணம் பெறவில்லையெனில் நிலத்து பட்டா பெயரில் உள்ளவரின் வங்கி கணக்கு கொடுக்கப்படாமல் இருக்கலாம். எனவே விவசாயிகள் பட்டாதாரரின் பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்து அந்த எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு எண்ணோ, ஆதார் எண்ணோ தவறுதலாக இருக்கலாம் எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் ஆதார் எண்ணையும், தங்களது வங்கி கணக்கு எண்ணையும் உடனடியாக சரி செய்து பயன்பெறலாம். இவ்வாறு பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி தெரிவித்துள்ளார்.


Tags : Indian ,Communist ,Hon'ble Finance Scheme ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு