×

தலைவர் உறுதி சோதியக்குடி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

கொள்ளிடம்,பிப்.7: கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்து சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

ஊராட்சி செயலாளர் சரபோஜி வரவேற்றார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேல்கண்ணன் முன்னிலை வகித்தார். தணிக்கைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் மற்றும் செலவினத்தொகை குறித்த விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது.


Tags : Social Audit Special Rural Council Meeting ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு 2 மணி நேர தொடர் சாதனை சிலம்பாட்டம்