×

சீர்காழி அருகே அரசூரில் வேகத்தடை அமைக்க வேண்டும்

சீர்காழி,பிப்.7: சீர்காழி அருகே அரசூரில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.சீர்காழி அருகே அரசூர் காளியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சாடா தொண்டு நிறுவன தலைவர் ராஜேந்திரன், சீர்காழி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்திக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:நாகை மாவட்டம் சீர்காழி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட அரசூர் மாநில நெடுஞ்சாலை மெயின் ரோடு காளியம்மன் கோயில், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் நடமாடக்கூடிய கூட்ட நெரிசலான மெயின் ரோட்டில் போக்குவரத்து வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் நடக்கின்றது.

மேலும் அரசூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஆலமரத்தின் கிளைகள் சாலையோரம் சாய்வாக இருப்பதால் உயரமான கனரக வாகனம் செல்லும் போது போக்குவரத்து இடையூறு சிறு, சிறு விபத்துக்கள் நடக்கின்றது. ஆகவே தாங்கள் கருணைக்கூர்ந்து நேரடி பார்வையின் வாயிலாக மேற்கண்ட விபத்தை ஏற்படுத்தும் ஆலமரத்தின் கிளைகளை வெட்டவும், அதிவேகமாக வரும் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க காளியம்மன் கோயில் அருகேயும், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவ, மாணவிகள்பொதுமக்கள், வணிகர்கள், நலன் கருதி வேகத்தடை அமைக்க உத்தரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags : Rajoor ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்