×

மீண்டும் கடலுக்குள் விட்டப்பட்டது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடத்தில் கான்கிரீட் வீடு கட்ட ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம், பிப்.7: வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா உள்ள இடங்களில் ரூபாய் மூன்று லட்சத்தில் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் ஆலோசனை கூட்டம் அகஸ்தியன்பள்ளி காந்தி உதவி தொடக்கப்பள்ளி, மறைஞாயநல்லூர் ஆனந்தராசு உதவி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளி வளாகத்தில் நகராட்சி ஆணையர் பிரதான்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி மேலாளர் மன்சூர் அலி, பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், பணி ஆய்வாளர் பாலமுருகன், குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டு 1082 பயனாளிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், வீடு கட்டுவதற்கும் வீடு கட்டும் பணியினை ஒப்பந்தகாரர்களை கொண்டு வீடு கட்டுவதற்கு பயனாளிகளிடம் சம்மதமும் அதற்கான அமைப்பு குறித்து கலந்தலோசிக்கப்பட்டது.

Tags : concrete houses ,consultation meeting ,Gaza Storm ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...