உத்திரமேரூர், பிப்.7: உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் கண்ணொளி காப்பீடு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தெபோராள் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் லாரன்ஸ் பிரபாகரன், கம்மாளம்பூண்டி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஆர்.அண்ணாமலை கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவர் தீபாலட்சுமி மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பள்ளியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். பரிசோதனை செய்யப்பட்ட 55 மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.