×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம், பிப்.7: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாளை ரேஷன் கார்டு குறைதீர்முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ரேஷ் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மின்னணு குடும்ப அட்டை தொடர்புடைய குறைகள் பரிசீலிக்கப்படும்.மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் இணைத்தல் தொடர்பான பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.காஞ்சிபுரம் வட்டம் திருப்புக்குழி-1 கிராமம், பெரும்புதூர் வட்டம் காரந்தாங்கல் கிராமம், உத்தரமேரூர் வட்டம் தோட்டநாவல் கிராமம், வாலாஜாபாத் வட்டம் தோனாங்குளம் கிராமம், குன்றத்தூர் வட்டம் கொல்லசேரி  ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Ration card grievance camp ,Kanchipuram district ,
× RELATED தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது