×

கோவளத்தில் ஆபரேஷன் சாகர் காவச்

திருப்போரூர், பிப்.7: தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் 36 மணிநேர ஆபரேஷன் சாகர் காவச் எனப்படும் தீவிரவாத  தடுப்பு  ஒத்திகை நேற்று தொடங்கியது. கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து படகுகள் மூலமாக கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிலர் கரையேறினர். உடனே, கடலோர பாதுகாப்பு படையினர், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும், சாலையோர பயணமாக யாரேனும் தீவிரவாதிகள், மாறு வேடத்தில் வருகிறார்களா என கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



Tags : Kovalam ,
× RELATED கோவளத்தில் இப்தார் நோன்பு திறப்பு