×

வேங்கடமங்கலம் எஸ்ஆர்எம் பேருந்து பணிமனையில் திடீர் தீ விபத்து: 6 பஸ்கள் எரிந்து நாசம்

திருப்போரூர், பிப்.6: வேங்கடமங்கலம் கிராமத்தில் உள்ள எஸ்ஆர்எம் பஸ் பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பஸ்கள் எரிந்து நாசமாயின. கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் எஸ்ஆர்எம் நிறுவனத்தின் பேருந்து பணிமனை உள்ளது. இங்கு எஸ்ஆர்எம் நிறுவனத்தின் கல்லூரி பஸ்கள், ஆம்னி பஸ்கள் பழுது பார்த்தல், பழைய சேதமடைந்த பஸ்களை உடைத்து தரம் பிரித்து பாகங்களை சேகரித்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இந்த பணிமனையில் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது காஸ் கட்டிங் பிரிவில் உள்ள ஒரு சிலிண்டரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 6 பழைய பஸ்கள் முழுவதுமாக எரிந்து நாசமாயின. தகவலறிந்து தாம்பரம், மறைமலைநகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சேத மதிப்பு விபரம் தெரியவில்லை.  இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : death ,bus workshop ,Venkatamangalam SRM ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...