×

அண்ணா சாலையில் பரபரப்பு நீதிபதி மனைவி கார் மீது கல் வீசி தாக்குதல்: போதை வாலிபர் கைது

சென்னை, பிப் .6: அண்ணாசாலையில் சென்ற நீதிபதியின் மனைவி கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் கார்த்திக்(32). இவர் அண்ணாசாலையில் உள்ள ஹெல்மெட் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். கார்த்திக் ேநற்று முன்தினம் மாலை குடிபோதையில் அண்ணாசாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் மர்ம ஆசாமி ஒருவர் கார்த்திக்கை உரசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து பைக் மீது எறிந்தார். அப்போது அந்த வழியாக வந்த நீதிபதி மனைவி ஒருவரின் காரின் இடதுபுற முன்பக்க கதவு மீது கல் விழுந்தது. இதில் காரின் கதவு சேதமடைந்தது. அப்போது காரில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கல் வீசிய நபரை பிடித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், போதையில் பைக் மீது வீசிய கல் கார் மீது விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Attorney ,road ,Anna ,
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்...