நீடாமங்கலம்,பிப்.6: நீடாமங்கலம் அருகில் உள்ள பொதக்குடி கிளை தமுமுக சார்பில் அதன் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் திருவாரூர் கலெக்டரிடம் மனு ஒன்று கொடுத்துள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது:மன்னார்குடியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாததால் ரத்தம் தேவையுடைய நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்தம் பெறப்பட்டு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.இதனால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பல அமைப்புகளுடைய ரத்த நன்கொடையாளர்கள் மன்னார்குடி வந்து டோக்கன் பெற்று அதன்பிறகு திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. சுமார் 30 கி.மீ தூரத்தை கருத்தில் கொண்டு சலிப்படைந்து வர மறுப்பதாலும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் சில நோயாளிகளுக்கு ரத்தம் கிடைக்காமல் மிவும் சிரமபடுகிறார்கள்.மன்னார்குடியை சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரத்தம் விரைவில் கிடைக்காமல் பாதிப்படைகிறார்கள்.எனவே கலெக்டர் மன்னார்குடி அரசுமருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ரத்த வங்கியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்