×

கஜா புயலில் சேதமான பூசலாங்குடி சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி, பிப்.6: கஜாபுயலால் சேதமான பூசலாங்குடி சுகாதாரவளாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கிய கஜாபுயலில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடம், சுற்று சுவர், அங்கன்வாடி, ரேஷன்கடை, அரசு கல்லூரி போன்ற அரசு அலுவலகங்கள பலசேதம் அடைந்து ஒருவருடம் மேல் ஆகிறது. ஆனால் இதுவரை எதுவும் சீரமைக்க வில்லை. இந்நிலையில் பூசலாங்குடி ஊராட்சி புஞ்சையூர் வடக்கு தெரு உள்ள சுகாதார வளாகம் இருந்தது. இதை இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்தனர். கஜாபுயலில் இந்த சுகாதார வளாகம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதுவரை சீரமைக்கவில்லை, இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கஜாபுயலில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் ஆய்வு செய்த பின்னர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யபடும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, ஊராட்சி மன்ற தலைவர் சுபிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Gaja Storm ,
× RELATED காரைக்காலில் கஜா புயலில் தரை தட்டிய...