அறந்தாங்கி, பிப். 6: அறந்தாங்கி அடுத்த குரும்பூர் பாலசாஸ்தா, ராக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அடுத்த குரும்பூரில் பாலசாஸ்தா, ராக்கம்மாள் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30ம் தேதி அனுக்ஞையுடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினசரி யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகவேள்விகள் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகபூஜைகள் நிறைவு பெற்று பாலைவனம் ஜமீன்தார் துரை.தாமரைச்செல்வன், சிலட்டூர் நாட்டு தலைவர் தங்கவேல், குரும்பூர் சேதுசெல்வராமன் முன்னிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.