×

தூத்துக்குடியில் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

தூத்துக்குடி, பிப். 6: தூத்துக்குடி பிரையண்ட் நகர் 6வது தெருவில் பிரம்மசக்தி அம்மன் கோயில் உள்ளது. இதே பகுதியை சேர்ந்த முருகேசன் (49) என்பவர் கோயில் தர்மகர்த்தாவாக உள்ளார். நேற்று முன்தினம் கோயிலை நிர்வாகிகள் வழக்கம்போல பூட்டிச் சென்றனர். மறுநாள் காலையில் திறக்க சென்றபோது கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.2 ஆயிரம் திருடு போயிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து தர்மகர்த்தா முருகேசன், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Temple ,robbery ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்