×

வள்ளலார் நினைவு தினம் நாளை மறுநாள் டாஸ்மாக் மூடல்

தூத்துக்குடி, பிப். 6: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (8ம் தேதி) டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (8ம் தேதி) தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003 விதி 12 துணைவிதி (1)ன் படி அனைத்து டாஸ்மாக் மதுகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மற்றும் எப்எல்2, மற்றும் எப்எல்3 உரிமத்தில் உள்ள பார்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Vallalar Memorial Day Tomorrow Task Closure ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு