நெல்லை, ஜன. 6: நெல்லை சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயில் பொறுப்பு நிர்வாக அலுவலராக தென்காசி கோயில் நிர்வாக அலுவலர் யக்ஞ நாராயணன் இருந்துவந்தார். இந்த நிலையில் புதுக்கோட்டை அரண்மனை தேவஸ்தான் நிர்வாக அலுவலராக இருந்துவந்த ராமராஜன் நெல்லையப்பர் கோயிலின் புதிய நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்–்டார். அவர் நேற்று நெல்லை வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். இவரிடம் யக்ஞ நாராயணன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.