×

விசாரணைக்கு ஆஜராகாத தொழிலாளிக்கு பிடிவாரண்ட்

சேலம், பிப்.6: சேலம் அருகே கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தொழிலாளிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஏத்தாப்பூர் அடுத்த மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் (45), வேலுமணி (53). இருவரும் கூலி தொழிலாளிகள். கடந்த 2018ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக, ஏத்தாப்பூர் போலீசார் இவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக, செந்தில்குமார் மற்றும் வேலுமணி ஆகியோர் நேற்று கோர்ட்டிக்கு வந்தனர். இதனிடையே விசாரணையின் போது, செந்தில்குமார் மட்டும் நீதிபதி முன்பு ஆஜரானார். உடன் வந்த வேலுமணி, திடீரென மாயமானார். இதனையடுத்து, செந்தில்குமாரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வேலுமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags : hearing ,
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்