×

தைப்பூச திருவிழா பாதுகாப்புக்கு பழனி கோயிலுக்கு 250 போலீசார் பயணம்

நாகர்கோவில், பிப். 6:  தைப்பூசம் வருகிற 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கும். குறிப்பாக அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை உள்பட 6 கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயில்களில் பக்தர்கள் அதிக அளவு வருவதால் கோயிலில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். பழனி முருகன் கோயில் பாதுகாப்பு பணிக்கு நாகர்கோவிலில் இருந்து நேற்று டிஎஸ்பி சுபராஜ் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 250 போலீசார் புறப்பட்டு சென்றனர்.

Tags : policemen ,Palani ,festival ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்