×

தீப்பிடித்து வீடு நாசம்

காரைக்குடி, பிப்.6:  காரைக்குடியில்  தீவிபத்தில் ஒரு வீடு எரிந்து நாசமானது. காரைக்குடி ரயில்வே ரோடு பாண்டிகோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (52). இவர் நேற்று காலை தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பகல் 11 மணியளவில் பெருமாளின் வீட்டில் தீ பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் காரைக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பெருமாளின் வீட்டு பீரோவில் இருந்த தங்க செயின், தோடு உள்ளிட்டவை சுமார் பத்து பவுன் நகைகள் தீயில் கருகின. மேலும் வீட்டு உபயோகபொருட்களும் எரிந்து நாசமாயின. முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் தீயணைப்பு துறையினர் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : House ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்