×

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

திருவில்லிபுத்தூர், பிப். 6: திருவில்லிபுத்தூரில் உள்ள கீழே புதுத்தெருவை தெருவை சேர்ந்த சங்கரசுப்பிரமணியனி மனைவி முத்துலட்சுமி (57). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு  வாலிபர், அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்  கொண்டு தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, திருவில்லிபுத்தூர் நகர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில்  வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.  இதன்பேரில், குற்றப்பிரிவு எஸ்ஐ கனகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  வாலிபரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில்,  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்த சேர்மத்துரை (23) நகையை  பறித்து தப்பியோடியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார்,  சேர்மத்துரையை கைது செய்தனர். அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...