×

நாளை கோலாகலமாக நடக்கிறது திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புத்தூர், பிப். 6: திருப்புத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் நாளை (பிப்.7) பெருமாள், கோதை நாச்சியார் தைலக்காப்பு, திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியார் தைலக்காப்பு, திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு முதல் நாளாள நாளை மாலை 4.30 மணியளவில் ஆண்டாள் பெரிய சன்னதி எழுந்தருளலும், இரவு 7.45 மணியளவில் பெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெறும். இரண்டாம் நாளான பிப்.8ம் தேதி காலை 8.30 மணியளவில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், 9 மணிக்கு தைலம் திருவீதி சுற்றுதலும் நடைபெறும்.
தொடர்ந்து 10 மணியளவில் தைலம் சாத்துதல், தொடர்ச்சியாக ஆண்டாளுக்கு நவகலஸ அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெறும்.

மூன்றாம் நாளான பிப்.9ம் தேதி காலை ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தைலம் திருவீதி சுற்றுதலும் நடைபெறும். காலை 10.30 மணியளவில் தைலம் சாத்துதல், தொடர்ச்சியாக ஆண்டாளுக்கு நவகலஸ அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6 மணியளவில் ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவையும், மணவாள மாமுனிகள் கை தலத்தில் எழுந்தருளி கோதை நாச்சியாரை கடாஷித்தலும் நடைபெறும். நான்காம் நாளான பிப்.10ம் தேதி மாலை 5.30 மணியளவில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், 6.10 மணியளவில் ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் நடைபெறும். ஐந்தாம் நாளான பிப்.11ம் தேதி காலை 10.20 மணியளவில் பெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளல், பெரியாழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் நடைபெறும்.

மாலை 4.45 மணியளவில் ஆண்டாள் அங்குமணித் திருவீதிப்புறப்பாடு (திருக்கல்யாண சீர்வரிசை மங்கள பொருட்களுடன் திருவீதி உலா) நடைபெறும். தொடர்ந்து ஊஞ்சல் மாலை மாற்றுதல் நடைபெறும். மாலை 6.30 மணியளவில் பெருமாள், ஆண்டாள் நாச்சியார் சேர்த்தியாய் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளல் நடைபெறும். இரவு 7.36 மணிக்குமேல் 8.40 மணிக்குள் திருக்கல்யாண மஹோத்ஸவம், திருமாங்கல்யாண தாரண வைபவம் நடைபெறும். இரவு 9.40 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெறும்.

Tags : Tirukkothiyoor Perumal Temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி