×

கவுன்சிலர்களின் உறவினர்கள் ஆக்கிரமிப்பு

குஜிலயம்பாறை, பிப்.6: குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களின் உறவினர்கள் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்துள்ளது. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஆனால் கவுன்சிலர்களின் உறவினர்கள் கூட்ட அரங்கிற்குள் வந்து அமர்ந்து ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இனிவரும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் தவிர, கவுன்சிலர்கள் உறவினர்கள் மற்றும் வேறு தனி நபர்களை கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்காமல் இருக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : relatives ,councilors ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை