×

குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

திருப்பூர், பிப். 6:திருப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் எரிக்கப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றை பலர் குப்பைகள் கொட்டும் பகுதியாக மாற்றி வருகின்றனர். பாலித்தீன் குப்பைகள், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்ற பல்வேறு குப்பைகள் மூட்டை மூட்டையாக வீசப்படுகின்றன. இதனால், துர்நாற்றம் வீசி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஓடையில் வீசப்படும் குப்பைகளுக்கு தீ வைப்பதால், அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகாரிகளும் இது குறித்து நடவடிக்கை எடுக்காததால், சுற்றுச்சூழலும் வெகுவாக மாசுபட்டு வருகிறது. இந்த ஓடையில் குப்பைகளை கொட்டவோ, தீ வைத்து எரிக்கவோ கூடாது என அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். மேலும் குப்பைகளை கொட்டி, தீ வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,areas ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...