×

கும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தஞ்சை, பிப்.4: கும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தின்கீழ் வாலிபரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் மாதுளம்பேட்டை ஆணைக்காரன்பாளையம் தெற்கு வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பா குமார் (எ) செந்தில்குமார். இவரது மகன் தமிழ்செல்வன் (24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி. மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்கள் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்ச்செல்வன் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி