×

கோங்குடியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல்

அறந்தாங்கி, பிப். 4: அறந்தாங்கி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி அடுத்த கோங்குடி பகுதியில் வெள்ளாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணலை அள்ளி குவித்து வைத்து விற்பனை செய்வதாக தாசில்தார் சூரியபிரபுவுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கோங்குடி அத்தாணி பகுதியில் உள்ள மயானத்தின் அருகே ஆய்வு செய்தார். அப்போது அங்கு ரூ.41,230 மதிப்புள்ள 31 யூனிட் மணல் சட்டவிரோமாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பதுக்கி வைத்திருந்த மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்