×

பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மேலைச்சிவபுரி கோயிலில் வழிபாடு

பொன்னமராவதி, பிப். 4: பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், மேலைச்சிவபுரி கோயில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பொன்னமராவதி பகுதியில் மேலைச்சிவபுரி உட்பட பல்வேறு கோயில்களில் இருந்து பழனிக்கு பாதாயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். அதன்படி பொன்னமராவதி பாலமுருகன் கோயில், வலையபட்டி, கண்டியாநத்தம், தூத்தூர், மணப்பட்டி, மைலாப்புர்;, அஞ்சுபுளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதாயாத்திரையாக புறப்பட்டனர். இப்பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள் மேலைச்சிவபுரி சுப்பையா கோயிலில் வழிபாடு செய்து புறப்பட்டனர்.

Tags : Devotees ,Palani ,Melaichivapuri Temple ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...