×

தூத்துக்குடியில் மீனவரை தாக்கிய தொழிலாளி கைது

தூத்துக்குடி, பிப். 4: தூத்துக்குடியில் மீனவரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் ராஜா (44). மீனவரான  இவர், படகு மூலம்  மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரிடம் வேலைக்கு வருவதாக கூறி இதே பகுதியை சேர்ந்த அனீஸ் (29) என்பவர் முன்பணம் வாங்கியுள்ளார்.    ஆனால் ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்று விட்டு பின்னர் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல்  இருந்து நின்றுவிட்டார்.
சம்பவத்தன்று இதுபற்றி ராஜா, அனீசிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.  இதில் காயமடைந்த ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிந்து அனீசை கைது செய்தனர்.

Tags : fisherman ,Thoothukudi ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...