×

சாத்தான்குளத்தில் அனைத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தின விழா

சாத்தான்குளம், பிப். 4: தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்க அமைப்பு தினம், சாத்தான்குளத்தில் கொண்டாடப்பட்டது. வட்டத் தலைவர் தேவசமாதானம் தலைமை வகித்தார். வட்ட துணைத்  தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் முருகானந்தம்  வரவேற்றார். தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன்பு சங்க கொடியை மாவட்ட இணை  செயலாளர் ஜெயபால் ஏற்றி பேசினார். விழாவில் ஓய்வுபெற்ற தலைமை  ஆசிரியர் ஜான் லூயிஸ், ஓய்வுபெற்ற தொடக்க கல்வி அலுவலர் ஜோசப் துரைராஜ்,  வட்ட  இணை  செயலாளர் கிட்டு, ஓய்வுபெற்ற தாசில்தார் நடராஜன் ஆகியோர்  பேசினர். இதில் ஓய்வுபெற்ற மருந்தாளுநர் பாப்புராஜ், சங்க  உறுப்பினர்கள் சுடலைக்கண், குமரகுருபரன், அப்பாத்துரை, எமி,  நிர்மலா,  அன்னபழம், உத்தரலட்சுமி, நாராயணன், துப்புரவு தொழிலாளர் சங்க ஆத்தி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். வட்ட துணை தலைவர்  அந்தோணிகுழந்தை நன்றி கூறினார். 

Tags : Pattanam Pensioners Association Day ,Sathankulam ,
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...