×

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

நெல், பிப். 4: சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கருவநாயகம் மனைவி செல்லம்மாள் (80). இவர் தனது வீட்டில் சமையல் செய்யும்போது செல்லம்மாளின் சேலையில் தீப்பிடித்தது. இதில் காயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthatti ,Salem ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை