கெங்கவல்லி, பிப். 4: குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய அரசு திரும்ப பெறக்கோரி, கெங்கவல்லி அண்ணா சிலை முன்பு திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. முன்னதாக முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் பேரூர் செயலாளர் ஷேக்மொய்தீன், காங்கிரஸ் வட்டார தலைவர் அருள், மார்க்சிஸ்ட் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என கூறி கையெழுத்திட்டனர். தொடர்ந்து வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. நிகழ்ச்சியில் ராமலிங்கம், காசி, முத்துகிருஷ்ணன், சுப்ரமணி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.