ஏற்காடு, பிப். 4: தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி, ஏற்காட்டில் நேற்று காலை தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார மருத்து அலுவலர் தாம்சன் தலைமையில், ஏற்காடு பஸ் நிலையத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி காந்தி பூங்கா, கடை வீதி, காவல் நிலையம், புனித ஜோசப் பள்ளி, நாசரேத் பள்ளி வழயிாக கோயில் மேடு பகுதியில் நிறைவடைந்தது. இதில் தரண் கல்லூரியின் சுகாதார ஆய்வாளர், பயிற்சி மாணவர்கள் பேரணியில் பங்கேற்று தொழு நோய்க்கான அறிகுறிகள் மற்றும் வராமல் பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.