×

புதுச்சத்திரம் அருகே பொக்லைன் டிரைவர் மர்மச்சாவு

சேந்தமங்கலம், பிப்.4:  புதுச்சத்திரம் அருகே பொக்லைன் டிரைவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பரமத்திவேலூர் அடுத்த கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(35). பொக்லைன் ஓட்டுனர். இவரது மனைவி கௌசல்யா (30). இவர்களுக்கு நிவாஷினிஸ்ரீ (9) என்ற மகள் உள்ளார். சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 3 வருடத்திற்கு முன் ஏற்பட்ட தகராறில், கௌசல்யா மகளை அழைத்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். சரவணன் புதுச்சத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான பொக்லைனில் ஓட்டுனராக வேலை பார்த்தார். மது குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரை முத்துக்குமார் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் களங்காணியிலிருந்து காரைக்குறிச்சிபுதூர் செல்லும் சாலையில் உள்ள மழைநீர் வாய்க்காலில், சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marmachau ,Puducherry ,
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது