×

திருச்செங்கோட்டில் தொழிற்சாலையில் ஆணையர் ஆய்வு

திருச்செங்கோடு, பிப்.4: திருச்செங்கோட்டில் வார்ப்பிங் சைசிங் மில்லில் நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார குறைபாட்டிற்காக ₹10 ஆயிரம் அபராதம் விதித்தார். திருச்செங்கோடு நகரா்டசி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால், துப்புரவு ஆய்வாளர் ஜான்ராஜா மற்றும் பணியாளர்கள் 6 வது வார்டு குமரேசபுரம் பகுதியில், தனியார் வார்ப்பிங் சைசிங் மில்லில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது டெங்கு காய்ச்சலுக்கு காரணமான புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில்  பொருட்களை வைத்திருந்ததாக தொழிற்சாலைக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடக்கும் என்று அவர் எச்சரித்தார். மேலும், தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

Tags : Inspection ,Commissioner ,Tiruchengode factory ,
× RELATED மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!!