×

பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு செய்முறைத்தேர்வு நாளை தொடக்கம்

நாமக்கல், பிப். 4:  நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு நாளை (5ம் தேதி) துவங்குகிறது. இந்த தேர்வுகள் வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 30ம் தேதி செய்முறை தேர்வு பணிக்கு அகத்தேர்வாளர்கள், புறத்தேர்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும், அரசு பள்ளிகளுக்கு அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் தேர்வு நடத்த நியமிக்கப்பட்டிருந்தனர். இதற்கு நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தது. அதைத்தொடர்ந்து அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, அரசு பள்ளிகளுக்கு வெவ்வேறு தனியார் பள்ளி ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளுக்கு வெவ்வேறு அரசு பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு, நேற்று புதிய உத்தரவு தயாரிக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் உஷா வழங்கினார். இதையடுத்து நாளை முதல் செய்முறை தேர்வுகள் துவங்குகிறது.

Tags : Plus One ,classes ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார்...