×

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்கூட்டம்

தர்மபுரி, பிப்.4: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பள்ளி கல்வி ஆணையரிடம் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தர்மபுரி மாவட்ட சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி மாவட்ட தலைவராக நல்லம்பள்ளி பெருமாள், செயலாளராக தர்மபுரி ஏழுமலை, பொருளாளராக மொரப்பூர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினராக தர்மபுரி சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தர்மபுரி பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கூட்டத்தில் பொது செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு பேசுகையில், ‘காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தொடர்ந்து நம் கோரிக்கைகள் நிறைவேற அரசை வலியுறுத்துவோம்,’ என்றார். இதையடுத்து, ஏழை எளிய மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்வாதாரத்தையும், தொடக்க கல்வியையும் பாதிக்கின்ற வகையில் உள்ள 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வை இந்த ஆண்டே ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Elementary School Teacher Alliance ,
× RELATED மானிய கோரிக்கையின்போது புதிய...