×

விபத்தை ஏற்படுத்தும் மண்மேட்டை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வானூர்,  பிப். 4:  வானூர் மெயின் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் மண்மேட்டை அகற்ற  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வானூர் மெயின் ரோட்டில் சாலை  அகலப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்து தரைப்பாலமும் விரிவாக்கம்  செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிந்த நிலையில் பாலத்தின் ஓரத்தில் சாலையில்  குவிக்கப்பட்ட மண்மேடு அப்படியே உள்ளது. இதனால் அந்த பகுதியில் சாலை  குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே  மண்மேட்டை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : earthquake ,accident ,
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்