×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது

சிவகாசி, பிப். 4: உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சிவகாசி பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பாக ‘மக்களாட்சி நாயகர்கள்’ எனும் சாதனையாளர் விருது விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் கணேசன், சந்தான மாரியப்பன், தொழில் நகர் அரிமா சங்க தலைவர் கூடலிங்கம், தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச் சங்கம் தலைவர் முத்துராஜ், பசும்பொன் சித்தர் அறக்கட்டளை நிறுவனர் கோபி கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் மக்களாட்சி குறித்தும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்தும், நடைபெறவிருக்கும் வளர்ச்சி பணிகள் குறித்தும் பலரும் கருத்துகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சாதனை படைத்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சாதனையாளா்கள் விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பசும்பொன் சித்தர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.

Tags : winners ,elections ,
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...