×

கைத்தறி நெசவாளர்களுக்கு நிலுவைத் தொகை

தேனி, பிப். 4: கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் 12 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கலைக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களான நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளது.

இச்சங்க உறுப்பினர்கள் 15 நாட்களுக்குள் நெசவாளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு உட்பட தேவையான ஆவணங்களை உதவி இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை.20 என்ற முகவரியில் கலைத்தல் அலுவலரிடம்  சமர்ப்பிக்க வேண்டும்.  இதுகுறித்து மேலும் விபரங்களை அறிய 0452 - 2535669 என்ற தொலைபேசியினை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?