×

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள் ஆதார் இணைக்கணும் உதவி ஆணையர் அறிவுறுத்தல்

சிவகங்கை, பிப்.4:  தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை (சமூக பாதுகாப்புத் திட்டம்) தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மாநில அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையிலும் ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் அரசு நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தையல் தொழிலாளர் நல வாரியம், முடித்திருத்துவோர் நலவாரியம், சலவைத் தொழிலாளர் நல வாரியம், பனைமரத் தொழிலாளர் நல வாரியம், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியம், ஓவியர் நலவாரியம், பொற்கொல்லர் நலவாரியம், மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம், வீட்டுப்பணியாளர் நலவாரியம், சமையல் தொழிலாளர் நலவாரியம் உள்பட 17 நலவாரியங்களில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

 இதில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். எனவே சிவகங்கை மாவட்டத்தில் வாரியங்களில் பதிவு செய்து இதுவரை புதுப்பிக்காத தொழிலாளர்கள் மற்றும் ஆதார் எண் விபரத்தை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்காத தொழிலாளர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகலுடன், ஆதார் அடையாள அட்டை நகலை இணைத்து சிவகங்கை காஞ்சிரங்காலில் போக்குவரத்து மைதானம் செல்லும் வழியில் உள்ள சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(ச.பா.தி) அலுவலகத்தில் வழங்க வேண்டும். கூடுதல் விபரம் அறிய 04575-240320 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Labor Welfare Board ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...