×

பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப் 4:  திருப்பூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பி.எஸ்.என்.எல் அலுவலகர்கள் நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வில் (வி.ஆர்.எஸ்.இல்) சென்றவர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்கவேண்டும். மேலும் வி.ஆர்.எஸ் படி கிராஜூவட்டி உட்பட நிதிப்பலன்களைத் தராததைக் கண்டித்தும், எல்.ஐ.சி நிறுவனத்தை விற்பனை செய்வதைக் கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு சம்பளம் தராமல் நிறுத்தி வைத்திருப்பதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஜெய்வாபாய் பள்ளி அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஓய்வூதியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், மாநில உதவிச் செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : BSNL ,Pensioners ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு