×

தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு சிறப்பு பேருந்துகள்

பொள்ளாச்சி,பிப்.4: பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு, தைப்பூச திருவிழாவையொட்டி 7ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.   வரும் 8ம் தேதி பழனியில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவையொட்டி, அங்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து 7ம்  முதல் 9ம் தேதி வரை என தொடர்ந்து மூன்று நாட்களும், பழனிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக  கூடுதலாக 25 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.   அதுபோல் 8ம் தேதி மாலையிலிருந்து தைமாத பவுர்ணமி துவக்கம் என்பதால்,  திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் சென்று வர வசதியாக,  7ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை அடுத்தடுத்து 6 சிறப்பு பஸ்கள், மத்திய பஸ் நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில், திருவண்ணாமலைக்கு  இயக்கப்பட உள்ளதாக கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Palani ,Taipusa ,festival ,
× RELATED பழநி வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு