×

பெல் ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை

திருச்சி, ஜன.31: திருச்சி புத்தூர் சீனிவாசாநகர் மெயின் ரோடு 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கமல்(40), பெல் நிறுவனத்தில் வெல்டராக பணியில் உள்ளார். இவர் கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : home ,Bell ,
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!