×

அரசு மருத்துவமனையில் 2 கைதிகள் அனுமதி

சேலம், ஜன.31: காடையாம்பட்டியை  அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியை   சேர்ந்தவர் வேணுகோபால் (42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன், பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில்,  தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில் இவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவனையில், போலீசார்  அனுமதித்துள்ளனர்.

இதேபோல், கோவை மாவட்டம் பச்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (60). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர், நாமக்கல் போலீசார் போக்ஸா வழக்கில் கைது செய்தனர். இந்நியைில் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கைதிகள் இருவருக்கும் போலீஸ் பாதுகாப்புடன், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags : prisoners ,Government Hospital ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்