×

வெங்கடேசுவரா பள்ளியில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராசிபுரம், ஜன.31: நாமக்கல் மாவட்ட  மனநலத்திட்டத்தின் சார்பில், ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் வெங்கடேசுவரா  உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மனநல விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்ந நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேர்வு பயம், செல்போன் பயன்பாடு, போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில், மனநல ஆலோசகர் மற்றும் மனநல சமூக சேவகர் ரமேஷ் கலந்துகொண்டு தேர்வு பயம், மன அழுத்தம் போக்க மாணவர்களுக்கு  மூச்சு பயிற்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை உமாதேவி, ஆசிரியர்கள் புவனேஸ்வரி, மணி, செந்நில்நாதன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Venkateswara School ,
× RELATED வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி...