ராசிபுரம், ஜன.31: ராசிபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர், உடனடியாக செலுத்த வேண்டுமென ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பெ) நடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2018ல் சொத்து வரி பொது சீராய்வு மூலம் உயர்வு செய்யப்பட்டுள்ள வரித்தொகை, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை 2019ன் படியும், பொதுமக்கள் 1.4.18க்கு முன்புள்ள பழைய சொத்து வரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்களை, நகராட்சிக்கு நிலுவையின்றி செலுத்தி முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.